×

47வது நினைவு தினத்தையொட்டி

பெரம்பலூர்,டிச.25:பெரம்பலூரில் பெரியாரின் 47வது நினைவு தினத்தையொட்டி அவரசு சிலைக்கு திமுக, திக கட்சிகள் சார்பில் மாலை அணிவி த்து மரியாதை செலுத்தப் பட்டது. பெரியாரின் நினைவு தினத்தையொட்டி பெரம்பலூர் என்எஸ்பி சாலையில் உள்ள பெரியார் சிலைக்கு திமுக, திக, தீண்டாமை ஒழிப்பு முன்னணி உள்ளிட்ட அமைப்புகளின் சார்பாக மாலை அணிவித்து மரி யாதை செலுத்தப்பட்டது. இதன்படி திமுக சார்பாக மாவட்ட செயலாளர் குன்னம் ராஜேந்திரன் தலை மையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்ப ட்டது.

நிகழ்ச்சியில் முன் னாள் எம்எல்ஏ துரைசாமி மாநில நிர்வாகி டாக்டர் வல்லபன், தலைமை செய ற்குழு உறுப்பினர் ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர்கள் முகுந்தன், சிவக் குமார், மாவட்ட பொருளா ளர் ரவிச்சந்திரன், வேப்பூர் தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் ராஜேந்திரன், நகரச் செயலாளர் பிரபாகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தி.க., பகுத்தறி வாளர் கழகம் சார்பில் முகுந்தன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப் பட்டது. திக மாவட்டத் தலைவர் தங்கராசு, மாவட்டச் செயலாளர் அண்ணாதுரை, நகரத் தலைவர் அக்ரி ஆறுமுகம், கந்தசாமி, பகு ஜன் சமாஜ் கட்சி மாநிலச் செயலாளர் காமராசு உள் ளிட்டோர் கலந்து கொண்ட னர். இதேபோல் தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் அமைப்பின் மாநில துணை பொதுச்செயலாளர் சின்னதுரை தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் மாவட்ட தலைவர் செல்லதுரை, இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் ஞானசேகரன், பிஎஸ்பி மா நில செயலாளர் காமராஜ் உள்ளிட்டப் பலரும் கலந்து கொண்டனர்.

Tags : occasion ,Memorial Day ,
× RELATED சுதந்திரப் போராட்ட வீரர்களின்...