×

புலியூர் வெங்கடாபுரம் பகுதியில் தேங்கிய கழிவுநீரை அகற்றும் பணி

கரூர், டிச.25: கரூர் மாவட்டம் புலியூர் வெங்கடாபுரம் பகுதியில் தினகரன் செய்தி எதிரொலி காரணமாக குடியிருப்பு பகுதிகளில் தேங்கிய கழிவுநீரை அப்புறப்படுத்தும் பணி பேரூராட்சி சார்பில் நடைபெற்று வருகிறது. கரூர் மாவட்டம் புலியூர் வெங்கடாபுரம் பகுதியில் பல்வேறு கழிவுகள் இந்த பகுதியில் சேர்ந்து கொள்வதால் கடும் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது எனக் கூறி இந்த பகுதியினர் கழிவுநீர் மத்தியில் சோறாக்கும் போராட்டம் நடத்தினர். இதுகுறித்து தினகரன் நாளிதழில் கடந்த 21ம் தேதி படத்துடன் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. இந்நிலையில், புலியூர் வெங்கடாபுரம் பகுதியில் பேரூராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்தை பார்வையிட்டு கழிவுநீர் செல்லாத வகையில் பொக்லைன் மூலம் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் புலியூர் வெங்கடாபுரம் பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். செய்தி வெளியிட்ட தினகரனுக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்துள்ளனர்.

Tags : Puliyur Venkatapuram ,area ,
× RELATED சொத்தை எழுதி வைக்க மறுத்ததால்...