×

சிலைக்கு கட்சியினர் மாலை அணிவிப்பு பனிப்பொழிவால் வரத்து குறைவு பூக்கள் விலை உயர்வு

கரூர், டிச.25: பனிக்காலங்களில் பூக்களின் விளைச்சல் குறைவு காரணமாக மார்க்கெட்டுக்கு வரத்து குறைவாகவே இருந்து வருகிறது. இந்நிலையில், கரூர் ரயில்வே நிலையம் அருகே செயல்பட்டு வரும் பூ மார்க்கெட்டுக்கு கடந்த சில நாட்களாக பூக்களின் வரத்து குறைவாக உள்ளதால் விலையும் உயர்ந்துள்ளது. கடந்த மாதம் வரை ரூ.1,000ம் வரை விற்பனை செய்யப்பட்டு வந்த மல்லிகைப் பூக்கள் நேற்று ரூ.2ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதேபோல், முல்லைப்பூக்களின் விலையும் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. பனிக்காலங்களில் பூக்களின் வரத்து குறைவு என்பதாலும், தேவை காரணமாக விலை சற்று உயர்வாக விற்பனை செய்யப்பட்டுள்ளது எனவும், வரும் காலங்களில், வரத்து அதிகரிக்கும்போது, பூக்கள் விலை குறையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Evening parade ,
× RELATED சிலைக்கு திமுக, அதிமுகவினர் மாலை...