குமாரபாளையம், டிச.25: டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளின் கோரிக்கையை தீர்க்க வலியுறுத்தி, குடியரசு தலைவரை சந்திக்க சென்ற காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கைது செய்யப்பட்டார். இதை கண்டித்து குமாரபாளையத்தில் காங்கிரஸ் கட்சியினர், நகர தலைவர் ஜானகிராமன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் தனகோபால், மாவட்ட பொதுசெயலாளர் கோகுல்நாத், நகர துணைத்தலைவர் சிவக்குமார், பொருளாளர் சிவராஜ், நகர செயலாளர் சுப்ரமணியன், துணைத்தலைவர் சரத்குமார், காளியப்பன், தங்கராஜ், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் குப்புராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.