×

சமையல் செய்த போது காஸ் கசிந்து தீ விபத்து: 2 வாலிபர்கள் படுகாயம்

திருப்பூர்,  டிச. 25:  திருப்பூரில் சமையல் செய்த போது காஸ் கசிந்து ஏற்பட்ட தீ  விபத்தில் 2 வாலிபர்கள் படுகாயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பீகார் மாநிலம் வைஷாலி நகரை  சேர்ந்தவர் அபிமன்யு (22). அதே பகுதியை சேர்ந்தவர் பூஷன்குமார் (18).  இவர்கள் 2 பேரும் திருப்பூர் பழவஞ்சிபாளையம் பகுதியில் ஒரு அறையில் தங்கி  அப்பகுதி பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தனர்.

இந்நிலையில்  கடந்த 22ம் தேதி இரவு இருவரும் அறையில் உணவு சமைத்துக் கொண்டிருந்தனர்.  அப்போது எதிர்பாராத விதமாக சிலிண்டரில் காஸ்  கசிவு ஏற்பட்டு  தீப்பிடித்தது. இதனால் இருவரின் உடம்பிலும் தீப்பற்றி எரிய தொடங்கியது.  இருவரின் அலறல் சப்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து தீயை  அணைத்தனர். பின்னர் இருவரையும் மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அபிமன்யு மட்டும் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு  மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர கிசிச்சை  அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வீரபாண்டி போலீசார் வழக்குப்பதிவு  செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : teenagers ,
× RELATED குமரியில் அடுத்தடுத்து விபத்து 3 வாலிபர்கள் உள்பட 4 பேர் பரிதாப சாவு