×

குடியாத்தம் அருகே நூறுநாள் வேலை கேட்டு தொழிலாளர்கள் மறியல்

வேலூர், டிச. 25: குடியாத்தம் அருகே 100நாள் வேலை கேட்டு தொழிலாளர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த அக்ராவரம் கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் ஒரு பிரிவினருக்கு மட்டும் வேலை வழங்கப்பட்டு வருகிறதாம். மற்றொரு பிரிவினருக்கு வேலை வழங்கப்படுவதில்லையாம்.  இதுகுறித்து ஊராட்சி செயலாளர் சுதாகரிடம் பலமுறை கோரிக்கை வைத்துள்ளனர். இருப்பினும் வேலை வழங்காமல் ெதாடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வந்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த தொழிலாளர்கள் நேற்று காலை குடியாத்தம்-பெரும்பாடி சாலையில் அஞ்சல் அலுவலகம் எதிரே சாலை மறியலில் ஈடுபட்டனர்.இதுகுறித்து தகவலறிந்த குடியாத்தம் தாலுகா போலீஸ் தனிப்பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி வேலை வழங்க நடவடிக்கை எடுப்பதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து தொழிலாளர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் 30நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags : Gudiyatham ,
× RELATED கிராமத்திற்குள் நுழைந்த யானைகள்...