×

காட்பாடி சாலையில் கிடந்த 61 ஆயிரத்தை மீட்டு போலீசிடம் ஒப்படைத்த வாட்டர் கேன் சப்ளையர்கள் எஸ்பி பாராட்டு

வேலூர், டிச.25: காட்பாடி சாலையில் கிடந்த ₹61,100ஐ மீட்ட வாட்டர் கேன் சப்ளையர்கள், அதை போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்களை எஸ்பி செல்வகுமார் பாராட்டினார்.  வேலூர் கஸ்பா பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் விக்னேஷ்(32), பொய்கை பீமாராவ் தெருவைச் சேர்ந்தவர் ரத்னவேலு(22). இவர்கள் 2 பேரும் வேலூர், காட்பாடி உள்ளிட்ட பகுதிகளில் வாட்டர் கேன் சப்ளை செய்து வருகின்றனர். நேற்று காட்பாடி ஓடைபிள்ளையார் கோயில் அருகே வாட்டர் கேன் சப்ளை செய்து கொண்டிருந்தனர். அப்போது அங்குள்ள சிற்றுண்டி உணவகத்திற்கு எதிரே சாலையில், பை ஒன்று கிடந்தது. அதனை எடுத்து பார்த்தபோது, அதில் ₹61,100 இருப்பது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரும் சாலையில் கிடந்த பணப்பையை எடுத்துச்சென்று காட்பாடி இன்ஸ்பெக்டர் நந்தகுமாரிடம் ஒப்படைத்தனர். இதையறிந்த எஸ்பி செல்வக்குமார், வாட்டர் கேன் சப்ளையர்கள் 2 பேரையும் நேரில் அழைத்து எஸ்பி செல்வகுமார் பாராட்டினார். தொடர்ந்து பணம் தவறவிட்ட நபரை வரவழைத்து அவரிடம் ₹61,100 ஒப்படைக்கப்பட்டது.


Tags : SP ,suppliers ,Katpadi Road ,
× RELATED மாணவர்களின் உயர்கல்வி கனவிற்கு...