×

பிக்கட்டியில் தி.மு.க., சார்பில் கிராம சபை கூட்டம்

மஞ்சூர்,டிச.25:   மஞ்சூர் அருகே பிக்கட்டியில் தி.மு.க. சார்பில் கிராம சபை கூட்டம் நடந்தது. ‘அ.தி.மு.க.வை நிராகரிக்கிறோம்’ என்ற தலைப்பில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் உத்தரவின் பேரில், தி.மு.க. சார்பில் நேற்று முன்தினம்மாநிலம் முழுவதும் கிராம சபை கூட்டம் நடந்தது. இதன் ஒரு பகுதியாக ஊட்டி தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட பிக்கட்டி பேரூராட்சி தி.மு.க சார்பில் குந்தா ஒசட்டி பகுதியில் கிராம சபை கூட்டம் நடத்தப்பட்டது. இதில், பேரூராட்சி தி.மு.க. செயலாளர் நடராஜ் தலைமை தாங்கினார்.

மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு துணை அமைப்பாளர் ராஜூ, பேரூராட்சி நிர்வாகிகள் கணேஷ், ராமசந்திரன், புலவர் அப்பு வாத்தியார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் ஒசட்டி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் தி.மு.க.வினர் திரளாக கலந்து கொண்டனர். தமிழகத்தில் ஆளும் அ.தி.மு.க. தமிழக மக்களுக்கு இழைத்து வரும் துரோகம் குறித்தும், அதில் இருந்து மக்களையும், தமிழகத்தை மீட்பது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இதில் கட்சி நிர்வாகிகள் சுப்ரமணி, நடேசன், மாலி, தியாகு, ரங்கசாமி, சந்திரன், ராஜன், தங்கராஜ், சுரேஷ்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags : Village council meeting ,DMK ,Pikatti ,
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மீனவ...