×

ஆர்ப்பாட்டம் செய்த 203 பேர் கைது

விருதுநகர், டிச.25: விருதுநகர் ஆர்.ஆர்.நகரில் வெள்ளாளர் முன்னேற்ற கழகம் சார்பில் வேளாளர், வெள்ளாளர் பெயரை மாற்று சமுதாயத்திற்கு தாரை வார்ப்பதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பட்டம்புதூர், வாடியூர், வி.ராமலிங்காபுரம், கன்னிசேரி, ஆவடையாபுரம், மேட்டமலை உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு மத்திய, மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 102 பெண்கள் உட்பட 203 பேரை வச்சக்காரப்பட்டி போலீசார் கைது செய்தனர்.

Tags : protesters ,
× RELATED இஸ்ரேல்-ஹமாஸ் போரை நிறுத்த நடவடிக்கை...