×

ராஜபாளையம் கோதண்டராமர் கோயிலில் இன்று சொர்க்கவாசல் திறப்பு

ராஜபாளையம், டிச. 25: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ராஜபாளையம் கோதண்டராமர் கோயிலில் ஆயிரம் கிலோ பூக்கள் கொண்டு அலங்கரிக்க பணியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர். ராஜபாளையம் - தென்காசி சாலையில் பழமையான கோதண்டராமர் கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பை முன்னிட்டு சிறப்பாக கொண்டாடுவது வழக்கம். இந்த ஆண்டு கொரோனா பாதிப்பால் கோயில் அடைக்கப்பட்டு சாமி தரிசனத்துக்கு அனுமதிக்காமல் இருந்தது.

இந்நிலையில் கோயில்கள் திறந்து சமூக இடைவெளியுடன் சாமி தரிசனம் செய்ய அரசு உத்தரவிட்டது. இதையடுத்து டிச.25ம் தேதி ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியை உற்சாகத்துடன் கொண்டாடும் விதமாக சிங்கராஜா கோட்டை பகுதியைச் சேர்ந்த கோயில் நிர்வாகம் சார்பில் நூற்றுக்கு மேற்பட்ட பெண்கள் ஆயிரம் கிலோ பூ மற்றும் துளசியை கொண்டு தோரணங்கள் மற்றும் அலங்கார பணிக்காக பூ கட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags : Gate of Heaven ,Rajapalayam Gothandramar Temple ,
× RELATED திருப்பதியில் ஜனவரி 1ம் தேதி வரை...