உத்தமபாளையம், டிச. 25: உத்தமபாளையம் எஸ்ஐ முனியம்மாள் தலைமையில், போலீசார் இங்குள்ள அரசு மருத்துவமனை முன்பு வாகனச்சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது டூவீலரில் வந்த வாலிபரை சோதனை செய்தனர். டூவீலரில் 4 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து உத்தமபாளையம் காவல் நிலையத்திற்கு போலீசார் சம்பந்தப்பட்ட வாலிபரை அழைத்து சென்று விசாரணை செய்தனர்.
கம்பத்திலிருந்து கஞ்சா வாங்கி வந்ததாகவும், தமது சொந்த ஊர் திருப்பூர் என்றும் தனது பெயர் விஷ்ணு (25), என்றும் வாலிபர் தெரிவித்தார். அவர் கூறிய தகவல் உண்மையா என்று விசாரணை செய்து 4 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.