காரைக்குடி, டிச.25: காரைக்குடியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காரைக்குடியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நகர துணைச்செயலாளர் பாண்டியை தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டவர்களை கைது செய்ய வேண்டும். கழனிவாசல் ஓ.சிறுவயல் சாலையில் உள்ள டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் சங்கு உதயகுமார் தலைமை வகித்தார். மாநில செயலாளர் இளையகவுதமன், மாவட்ட துணைசெயலாளர் தாக்கூர் தமிழேந்தி, பெரியசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.