×

விவசாயிகள் முற்றுகை போராட்டம்

சிவகங்கை, டிச.25: மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்ப பெற வலியுறுத்தி சிவகங்கை தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்டு தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கம் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. மாவட்ட செயலாளர் முருகன் தலைமை வகித்தார்.

ஒன்றிய செயலாளர்கள் தவம், பாலகிருஷ்ணன், ராமநாதன், ராஜேந்திரன் முன்னிலை வகித்தனர். ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் மலைச்சாமி, சிவகங்கை மாவட்டத்தலைவர் மாணிக்கவாசகம் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் போராட்டத்தில் கலந்துகொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட 71 பேரை சிவகங்கை நகர் போலீசார் கைது செய்தனர்.

Tags : Farmers siege struggle ,
× RELATED எண்ணெய் குழாய் பதிக்கும்...