×

குடியிருப்பு, கடைகளில் புகுந்து குரங்குகள் அட்டகாசம்

ஆர்.எஸ்.மங்கலம், டிச.25:  ஆர்.எஸ்.மங்கலம் டவுன் பகுதியில் உள்ள கடை மற்றும் குடியிருப்புகளுக்குள் புகுந்து குரங்குகள் அட்டகாசம் செய்வதால், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இதனால் குரங்குகளை பிடித்து வனப்பகுதியில் விட பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
ஆர்.எஸ்.மங்கலம் டவுன் பகுதிகளில் 5க்கும் மேற்பட்ட குரங்குகள் கூட்டமாக வீதிகள், மற்று வீட்டு பகுதிகளில் சுற்றி திரிகின்றன. இது வீடுகளுக்குள் புகுவதால், குழந்தைகள் கதறுகின்றனர்.

கொரோனா ஊரடங்கால் பள்ளிகளுக்கு போகாமல் வீடுகளில் உள்ள சிறுவர்கள் இந்த குரங்கு கூட்டத்தை பார்த்து அச்சப்படுகின்றனர். வீட்டிற்குள் புகுந்து குழந்தைகளின் கைகளில் உள்ள தீன்பண்டங்களை பிடிங்கி சென்று விடுகிறது. மரங்களில் உள்ள காய், பழங்களை வீணடித்து வருகின்றது. குழந்தைகள் பயப்படுவது ஒரு புறமிருக்க, வீடுகளில், மரங்களில் இருக்கும் பொருட்களையும் சேதப்படுத்தி வருகின்றது. குழந்தைகள் வெளியில் வந்து விளையாடுவதற்கு கூட அச்சமடைந்து வருகின்றனர்.

ஆகையால் பொதுமக்களின் அச்சத்தை போக்கும் விதமாக குடியிருப்பு பகுதிகளில் சுற்றி திரியும் குரங்குகளை பிடித்து பாதுகாப்பாக வனப்பகுதியில் கொண்டு போய் விடுவதற்கு வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags : apartments ,shops ,
× RELATED உரிய ஆவணமில்லாத ரூ.68 ஆயிரம் பறிமுதல்