×

‘போன வருச பொங்கல் வேஷ்டி சேலையே இன்னும் வழங்கலீங்க’: கிராமமக்கள் கலெக்டரிடம் மனு

விருதுநகர், டிச.24: கடந்த ஆண்டுக்கான பொங்கல் வேஷ்டி, சேலையே இன்னும் வழங்கவில்லை என கிராமமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். விருதுநகர் கலெக்டர் அலுவலகத்திற்கு பெரியபேராலி கிராமமக்கள் நேற்று வந்தனர். அவர்கள் அளித்த மனுவில், பெரிய பேராலி கிராம மக்களுக்கு கடந்த பொங்கல் பண்டிகைக்கு வழங்க வேண்டிய இலவச வேஷ்டி, சேலை இன்றுவரை வழங்கவில்லை. இது தொடர்பாக கடந்த நவ.9ல் மனு அளித்தோம்.

விருதுநகர் வட்டாட்சியர் நடவடிக்கை எடுக்க தாங்கள் அறிவுறுத்தி இருந்தீர்கள். ஆனால் இன்றுவரை வட்டாட்சியர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எங்களுக்கு இன்னும் வேஷ்டி, சேலை வழங்கவில்லை. இந்நிலையில் அடுத்த பொங்கலும் வந்துவிட்டது. பெரிய பேராலி மக்களுக்கு வழங்க வேண்டிய வேஷ்டி, சேலையை விரைவாக வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

Tags : Pona Varusa ,Vashti sari ,Collector ,
× RELATED குடிநீர் பிரச்னைகளுக்கு...