×

வீட்டிற்கு வருகிறது சபரிமலை பிரசாதம்

விருதுநகர், டிச.24: ரூ.450 கட்டணம் செலுத்தினால் சபரிமலை பிரசாதம் வீடு தேடி வரும் என அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.விருதுநகர் முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் பால சுப்பிரமணியன் வெளியிட்ட தகவல்: விருதுநகர் அஞ்சலக கோட்டத்தில் அஞ்சல் துறை மூலம் சபரிமலை பிரசாதம் வழங்கப்பட்டு வருகிறது.

பொதுமக்கள் அருகில் உள்ள தலைமை, துணை அஞ்சலகங்களில் அதற்கான விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து ரூ.450 கட்டணம் செலுத்த வேண்டும். ஐயப்பனின் பிரசாதமான அரவணை, நெய், குங்குமம், விபூதி, மஞ்சள், அர்ச்சனை பிரசாதம் ஆகியவை விரைவு தபால் மூலம் வீட்டிற்கே கொண்டு வந்து சேர்க்கப்படும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Tags : home ,Sabarimala ,
× RELATED வாக்களிக்க வந்தபோது ‘இந்திய நாடு என் வீடு’- பாடலை பாடினார் நடிகர் வடிவேலு