×

சிவகங்கை மாவட்டத்தில் 4 சட்டமன்ற தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும் முன்னாள் அமைச்சர் பெரியகருப்பன் பேச்சு

காரைக்குடி, டிச.24: சிவகங்கை, காரைக்குடி, மானாமதுரை, இளையாங்குடி ஆகிய 4 சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 109 இடங்களி திமுக சார்பில் தமிழகம் மீட்போம் இணைவழி சிறப்பு பொதுக்கூட்டம் நடந்தது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். முன்னாள் அமைச்சர் பெரியகருப்பன் எம்எல்ஏ பேசுகையில், ‘‘50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் இந்த கூட்டங்களில் கலந்து கொண்டுள்ளனர். கலைஞர் ஆட்சியில் ஒவ்வொரு முறையும் திட்டங்களுக்கு ஒரு தலைப்பை கொடுத்து செயல்படுத்தி வந்தார்.

உழவர் சந்தை திட்டம், சமத்துவபுரம் திட்டம் என இந்தியாவுக்கே வழிகாட்டியாக திகழ்ந்தவர் கலைஞர். அந்த வகையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பல்வேறு தலைப்புகளை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். எத்தனை அரசியல் கட்சிகள் வந்தாலும் திமுகவை ஒன்றும் செய்ய முடியாது. 234 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறுவது உறுதி. சிவகங்கை மாவட்டத்துக்கு உட்பட்ட 4 தொகுதிகளிலும் நிச்சயம் வெற்றி பெறுவோம். ஊழல் செய்து நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட இந்த ஊழல் ஆட்சி அகற்றப்படும். மக்கள் அதிமுகவை புறக்கணிப்பார்கள் ’’என்றார்.
நிகழ்ச்சியில் 502 மூத்த நிர்வாகிகளுக்கு பொற்கிழி வழங்கப்பட்டடது.

முன்னாள் அமைச்சர் தென்னவன், துணைச்செயலாளர்கள் சேங்கைமாறன், மணிமுத்து, ஜோன்ஸ் ரூசோ, முன்னாள் எம்எல்ஏ சுபதுரைராஜ், முன்னாள் நகர்மன்ற தலைவர் முத்துத்துரை, தொழிலதிபர் நாதன், நகர செயலாளர் குணசேகரன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் நாகனி செந்தில்குமார், தகவல் தொழில்நுட்ப மாநில துணை அமைப்பாளர் இலக்குவன், சட்டபாதுகாப்பு குழு வழக்கறிஞர் பாலசுப்பிரமணியன், மாவட்ட மகளிர்அணி பவானி கணேசன், மகளிர் தொண்டர்அணி ஹேமலதா செந்தில், பொதுக்குழு உறுப்பினர் அசோகன், ஆதிகண்ணாத்தாள், தெய்வானை இளமாறன், மாவட்ட மருத்துவ அணி குமரேசன், வர்த்தக அணி கென்னடி, தகவல் தொழில்நுட்ப அணி ராமகிருஷ்ணன், எம் பாலசுப்பிரமணியன், சசிவர்ணன், நெப்போலியன், அன்பரசன், ஹரிதுரைராஜ், மாவட்ட கவுன்சிலர் ராதா பாலசுப்பிரமணியன், மஞ்சரி லெட்சுமணன், நகர துணை செயலாளர் கண்ணன், தாய்சிதம்பரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கல்லல் கிழக்கு ஒன்றியம் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன் தலைமையிலும், சாக்கோட்டை மேற்கு ஒன்றியம் சார்பில் ஒன்றிய பொறுப்பாளர் ஆனந்த், பள்ளத்தூர் கேஎஸ் ரவி தலைமையில் பல்வேறு பகுதியில் கூட்டம் நடத்தப்பட்டது. சாக்கோட்டை கிழக்கு ஒன்றியம் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் ஒன்றிய பொறுப்பாளர் சின்னத்துரை தலைமையில் பல்வேறு பகுதியில் கூட்டம் நடந்தது. கல்லல் மேற்கு ஒன்றியம் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன் தலைமையில் கூட்டம் நடந்தது.

திருப்புவனம் மேற்கு ஒன்றியத்தில் திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் வசந்தி சேங்கைமாறன் தலைமையில் மூன்று இடங்களிலும், கிழக்கு ஒன்றிய செயலாளர் கடம்பசாமி தலைமையில் கிழக்கு ஒன்றியத்தில் மூன்று இடங்களிலும், திருப்புவனம் நகரில் பேரூர் செயலாளர் நாகூர்கனி தலைமையில் ஒரு இடத்திலும் தமிழகம் மீட்போம் நிகழ்ச்சி நடந்தது. சிவகங்கை நகரில் இரண்டு இடத்தில் நகர் செயலாளர் துரைஆனந்த் தலைமையில் நடந்தது.

மாவட்டம் முழுவதும் நடந்த காணொலி காட்சி ஒளிபரப்பு நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள், கட்சியினர், பொதுமக்கள் உள்ளிட்ட 50ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மானாமதுரையில் நான்கு இடங்களில் நடந்தது. கிழக்கு ஒன்றிய செயலாளர் ராஜாமணி, நகர செயலாளர் பொன்னுச்சாமி, மேற்கு ஒன்றிய செயலாளர் அண்ணாத்துரை, ஊராட்சிஒன்றியக்குழு தலைவர் லதா, துணை தலைவர் முத்துச்சாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Tags : Periyakaruppan ,DMK ,assembly constituencies ,Sivagangai district ,
× RELATED காஞ்சியில் விறுவிறு வாக்குப்பதிவு:...