×

கீழே சாலை, மேலே ஓடுதளம் அமைத்து மதுரை விமான நிலையத்தைவிரிவாக்கம் செய்ய வேண்டும்: எம்பி மாணிக்கம் தாகூர் கடிதம்

மதுரை, டிச.24: கீழே சாலை, மேலே ஓடுதளம் என்ற முறையில் மதுரை விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டுமென, மத்திய விமான போக்குவரத்து துறை செயலாளர் பிரதீப் சிங் கரோலாவை டெல்லியில் சந்தித்து, காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் எம்பி கடிதம் வழங்கினார்.

விருதுநகர் காங்கிரஸ் எம்பியும், மதுரை விமான நிலைய ஆலோசனைக்குழு தலைவருமான மாணிக்கம் தாகூர் கடிதத்தில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாட்டின் பரபரப்பான விமான நிலையங்களில் ஒன்றாக மதுரை விமானநிலையம் உள்ளது. வாரணாசி (காசி), மைசூரு விமான நிலையங்களை போல கீழே சாலை, மேலே விமான ஓடுதளம் அமைக்கும் திட்டத்தை மதுரை விமான நிலையத்திலும் செயல்படுத்த வேண்டுமென மதுரை விமான நிலைய ஆலோசனைக்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

இத்திட்டத்திற்கு கூடுதல் நிதி செலவாகும் என்று இந்திய விமான நிலைய ஆணையம் மறுத்துவிட்டது. இது தென் தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு தடை போட்டது போல் இருக்கிறது.எனவே மாற்றாந்தாய் மனப்பான்மையை மத்திய அரசு கைவிட்டு, மதுரை விமான நிலைய ஓடுதள விரிவாக்கத்தை அண்டர் பாஸ் முறையில் அமைக்க மாநில நெடுஞ்சாலைத்துறையுடன் இணைந்து நிதி ஒதுக்கீடு செய்து துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தென்தமிழகத்தின் தொழில்துறை வளர்ச்சியை பொறுத்தவரையில் மதுரை முக்கிய இடமாக உள்ளது. எனவே எந்த ஒரு காலதாமதமும் இல்லாமல் விரிவாக்க பணிகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Tags : road ,Manikkam Tagore ,Madurai Airport ,
× RELATED 5 ஆண்டு திட்டம் போல் ஜவ்வாய் இழுக்கும் லெனின் வீதி சாலைப்பணி