×

கொடைக்கானலில் 50 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல்

கொடைக்கானல், டிச. 24: கொடைக்கானல் நகர் பகுதியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாடு அதிகம் இருப்பதாக நகராட்சிக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து நேற்று நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் சுப்பையா, பாண்டிசெல்வம் மற்றும் அலுவலர்கள் கான்வென்ட் சாலை, நாயுடுபுரம், அப்சர்வேட்டரி சாலை பகுதிகளில் உள்ள கடைகள், உணவகங்களில் அதிரடி சோதனை நடத்தினர். இதில் சுமார் 50 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் கைப்பற்றப்பட்டு, ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

தொடர்ந்து இதுபோல் சோதனைகள் நடைபெறும் எனவும், இனி பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தினால் கூடுதல் அபராதம், மேல் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Kodaikanal ,
× RELATED காட்டு மாடு தாக்கி மாணவன் காயம்