×

வைகுண்டம் பேரூராட்சி பகுதிகளில் கால்நடைகள் சுற்றி திரிந்தால் அபராதம்

வைகுண்டம், டிச.24: வைகுண்டம் பேரூராட்சி பகுதிகளில் கால்நடைகள் சுற்றித் திரிந்தால் அபராதம் விதிக்கப்படும் என பேரூராட்சி செயல் அலுவலர்(பொ)  சுந்தரவேல் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், வைகுண்டம் பேரூராட்சிக்கு உட்பட்ட முக்கிய சாலைகள், பஸ்நிலையம், கோயில் வளாகம், ரதவீதிகளில் பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் உயிராபத்து மற்றும் பொது சுகாதார கேடுகளை ஏற்படுத்தும் வகையில் சுற்றித் திரியும் மாடுகள், ஆடுகள், பன்றிகள், நாய்களை உரிமையாளர்கள் தாமாக முன்வந்து பிடித்து தங்களுக்கு சொந்தமான இடங்களில் வைத்து வளர்க்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது. தவறும் பட்சத்தில் பேரூராட்சி பணியாளர்கள் மூலம் காவல்துறை, வருவாய் துறையினர் உதவியுடன் கால்நடைகளை பிடித்து அப்புறப்படுத்தப்படுவதுடன், உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.

Tags : municipality areas ,Auwaikundam ,
× RELATED வைகுண்டம் பகுதியில் இன்று மின்தடை