×

கனிமொழி எம்பி ஆறுதல்

நெல்லை, டிச. 24: ஆந்திர பல்கலைக்கழக கல்வியியல் மற்றும் வேலை வாய்ப்பு ஆலோசகரும், ஆந்திர மாநில திமுக மாணவரணி அமைப்பாளருமான ராஜவர்மனின் தந்தையும், திமுக பேச்சாளருமான கவிஞர் பூல்பாண்டியன் உடல் நலக்குறைவால் காலமானார். இதையறிந்து பெருமாள்புரத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்ற கனிமொழி எம்பி, பூல்பாண்டியன் படத்திற்கு மரியாதை செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். திமுக நெல்லை மத்திய மாவட்ட செயலாளர் அப்துல் வகாப், லெட்சுமணன் எம்எல்ஏ ஆகியோர் உடனிருந்தனர்.

Tags :
× RELATED திருச்சி மாவட்டத்தில் 13 மையங்களில் 8,283...