×

நிவர் புயல், மழையால் சேதமடைந்த நெற்பயிர் ஏக்கருக்கு ரூ.30,000 வழங்க கோரி ஆர்ப்பாட்டம்

மன்னார்குடி, டிச.24:நிவர் புயல், கன மழையால் சேதமடைந்த நெற்பயிருக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும், அனைத்து அரசு தொகுப்பு வீடுகளையும் ரூ.5 லட்சம் மதிப்பில் புதிய கான்கிரீட் வீடுகளாக கட்டி தர வேண்டும், மாவட்டத்தில் அனைத்து கூரை வீடுகளையும் கான்கிரீட் வீடுகளாக கட்டி தர வேண் டும், கொரோனா ஊரடங்கு மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட அமைவருக்கும் ரூ.10 ஆயிரம் நிவாரணமாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், தமிழ்மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் மன்னார்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய சங்க நிர்வாகிகள் கலியபெருமாள், ராஜ்குமார், விவசாய தொழிலாளர் சங்க நிர்வாகிகள் கார்த்திகேயன், செல்வராஜ் ஆகியோர் தலைமை வகித்தனர். கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் செல்வராஜ், சிபிஐ ஒன்றிய செயலாளர் வீரமணி, நகர செயலாளர் கலைச்செல்வன், துணைத் தலைவர் தனிக்கொடி ஆகியோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் மத்திய, மாநில அரசுகளின் விவசாய விரோத போக்கினை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

Tags : Demonstration ,storm ,Nivar ,
× RELATED திருப்போரூர்-நெம்மேலி சாலையில்...