×

பூதலூர் அருகே ஆற்றில் மணல் கடத்தியவர் கைது

திருக்காட்டுப்பள்ளி, டிச.24: பூதலூர் அருகே நாச்சியார்பட்டி புது ஆற்றில் சிலர் அரசு அனுமதியின்றி மணல் கடத்துவதாக பூதலூர் போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் அப்பகுதிக்கு ரோந்துப்பணி சென்றனர். அப்போது ஒருவர் புதுஆற்றில் 5 சாக்குப்பைகளில் மணல் எடுத்து கட்டிக்கொண்டிருந்தார். விசாரணையில் அவர் மண்ணச்சநல்லூர் தாலுகா சோழங்கநல்லூர் சுப்பையன் மகன் பாலமுருகன்(33) என்பதும், அவர் அரசு அனுமதியின்றி மணல் கடத்தி விற்க முயன்றதும் தெரிய வந்தது. போலீசார் வழக்கு பதிந்து மணலுடன் பாலமுருகனை கைது செய்தனர்.

Tags : river ,Puthalur ,
× RELATED குமரியில் பரளியாற்றில் குளிக்கும் போது நீரில் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு