திருக்காட்டுப்பள்ளி, டிச 24: தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் தெற்கு ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியக்குழு கூட்டம் முகமதுசுல்தான் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் வருகிற 29ம் தேதி விவசாயிகளுக்கு விரோதமாக மத்திய அரசு கொண்டு வந்த சட்டங்களை திரும்ப பெறக் கோரி தஞ்சையில் நடைபெறும் பேரணியில் 1000 பேர் கலந்து கொள்வது, 100 நாள் வேலையை தொடர்ந்து வழங்கவும், ஊதியத்தை உடன் வழங்கவும் கோருவது உள்ளிட்ட தீர்மானங்களை ஒன்றிய செயலாளர் பாஸ்கர் படித்தார். தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.