×

தலைமை ஆசிரியர்கள் பங்கேற்பு பெண்ணிடம் வரதட்சணை கேட்டு டார்ச்சர்

புதுக்கோட்டை, டிச.24: புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை இ.பி.அலுவலகம் அருகே வசிப்பவர் ரமேஷ்கண்ணா. இவரது மனைவி பரமேஸ்வரி(26). இவர்களுக்கு திருமணமாகி 4 வருடம் ஆகிறது. திருமணத்தின்போது வரதட்சணையாக 15 பவுன் நகை, ஒரு பைக் மற்றும் சீர்வரிசைகளை பரமேஸ்வரி குடும்பத்தினர் செய்துள்ளனர். இந்நிலையில் மேலும் பரமேஸ்வரியிடம் வரதட்சணை கேட்டு ரமேஷ்கண்ணா, அவரின் தாய் திலகவதி, தந்தை, கருப்பையா மற்றும் அவரது அக்கா வரிஜா ஆகியோர் கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பரமேஸ்வரி புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் ரமேஷ்கண்ணா, திலகவதி, கருப்பையா, வாிஜா ஆகியோர் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதே போல் புதுக்கோட்டை சத்தியமூர்த்தி நகரை விக்டோரியா மகாராணி(24). இவருக்கும் திருச்சி நெ.1 டோல்கேட் பகுதியை சேர்ந்த மதன்ராஜ் என்பவருக்கு 2 ஆண்டுகளுக்கு முன் திருமணம் ஆனது. 6 மாதத்தில் ஒரு குழந்தை உள்ளது. வி்க்டோரியா மகாராணி கர்ப்பமாக இருப்பதால் தனது தாய் வீட்டுக்கு வந்துவிட்டார். அதன் பிறகு வரதட்சணை தரவேண்டும் என்று கூறி தனது மனைவியை கூப்பிட மதன்ராஜ் வரவில்லையாம். இது குறித்து விக்டோரியா மகாராணி புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Headmasters ,
× RELATED ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 3 அரசு பள்ளி...