×

அரியலூரில் போலீசார் கொடி அணிவகுப்பு பேரணி

அரியலூர், டிச.24: அரியலூர் நகரில் மாவட்ட எஸ்பி சீனிவாசன் தலைமையில் காவல்துறையினர் பிரம்மாண்ட கொடி அணிவகுப்பு பேரணி நடைபெற்றது. இதனை மாவட்ட எஸ்பி சீனிவாசன் கொடியசைத்து துவக்கி வைத்தார். இப்பேரணி அரியலூர் காமராஜர் திடலில் தொடங்கி சத்திரம், எம்ஜிஆர் சிலை வழியாக அண்ணா சிலையில் நிறைவடைந்தது. முடிவில் போராட்டம், கலவரத்தின் போது போலீசார் தடுத்தல், தாக்குதல், கைது செய்தல் குறித்து ஒத்திகை நடத்தினர். இந்நிகழ்ச்சியில் பேசிய எஸ்பி சீனிவாசனம், இம்மாவட்டத்தில் எந்தவித சட்டவிரோத செயலுக்கும், ரவுடிசத்திற்கும், கஞ்சா போன்ற போதைப் பொருள் விற்பனைக்கு இடம் கிடையாது. மேலும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது காவல் துறையினர் மிக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.

இவ்வணிவகுப்பில் அரியலூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சுந்தரமூர்த்தி, அரியலூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் மதன், அரியலூர் ஆயுதப்படை காவல் துணை கண்காணிப்பாளர் மணவாளன், அரியலூர் இன்ஸ்பெக்டர் செந்தில்மாறன், கீழப்பழுவூர் இன்ஸ்பெக்டர் வெங்கடேஸ்வரன், கயர்லாபத் இன்ஸ்பெக்டர் ராஜா, அரியலூர் நகர போக்குவரத்து இன்ஸ்பெக்டர் மதிவாணன் மற்றும் 200க்கு மேற்பட்ட காவல்துறையினர் இந்த அணிவகுப்பில் கலந்து கொண்டனர். மேலும் இந்த அணிவகுப்பில் வஜ்ரா, வருண் மற்றும் காவல்துறை வாகனங்களும் கலந்து கொண்டன.

Tags : parade ,Ariyalur ,
× RELATED போலீசார் கொடி அணிவகுப்பு