×

பெற்றோரை பராமரிக்காத மகனுக்கு எழுதி கொடுத்த தான செட்டில்மெண்ட் ரத்து

நாகை,டிச.24: நாகை அருகே பெற்றோரை பராமரிக்காத மகனுக்கு எழுதி கொடுத்த தானசெட்டில்மெண்ட் ஆவணத்தை ரத்து செய்து ஆர்டிஓ பழனிகுமார் உத்தரவிட்டார். நாகை அருகே கீழ்வேளூர் தாலுகா தேவூர் கச்சனம் பகுதியை சேர்ந்தவர் ரத்தினவேலு (73). இவருக்கு இரண்டு மகள், 3 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் ரத்தினவேலு தனக்கு சொந்தமான 2 ஏக்கர் 7 செண்ட் நிலத்தை இளைய மகன் ஆனந்த் பெயரில் கடந்த 2011 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26-ம் தேதி தான செட்டில்மென்ட் ஆவணம் செய்து கொடுத்தார். இந்நிலையில் ஆனந்தும், அவரது மனைவியும் ரத்தினவேலுவை தரக்குறைவாக பேசி வீட்டை விட்டு வெளியேற்றினர். இதனால் மனம் உடைந்த ரத்தினவேலு நாகை ஆர்டிஓ பழனிகுமாரிடம் பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு சட்டத்தின் கீழ் தானசெட்டில்மெண்ட் ஆவணத்தை ரத்து செய்யுமாறு புகார் மனு கொடுத்தார். இதன் பேரில் ஆர்டிஓ பழனிகுமார் விசாரணை நடத்தினார். விசாரணையில் சொத்துக்களை பெற்றுக்கொண்டு பெற்றோரை பராமரிக்காததால் ரத்தினவேலு தனது மகன் ஆனந்திற்கு எழுதிக்கொடுத்த தான செட்டில்மென்ட் ஆவணத்தை ரத்து செய்து உத்தரவிட்டார்.

Tags : Cancellation ,parents ,
× RELATED மின்வாரிய ஓய்வு பெற்றோர் போராட்டம்