×

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல்நிலை சரிபார்ப்பு பணி துவக்கம்


கிருஷ்ணகிரி, டிச.24: கிருஷ்ணகிரியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல்நிலை சரிபார்க்கும் பணியை கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார். கிருஷ்ணகிரியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்கு சரிபார்க்கும் இயந்திரங்கள் ஆகியவற்றை முதல்நிலை சரிபார்ப்பு கடந்த 2ம் தேதி துவங்கியது. மாவட்டத்தில் மொத்தம் 4026 பேல்ட் யூனிட், 3082 கண்ட்ரோல் யூனிட் மற்றும் 3329 விவி பேட் உள்ளிட்ட 10437 இயந்திரங்களில் முதல்நிலை சரிபார்க்கும் பணிகளை பெல் நிறுவன தொழில்நுட்ப பொறியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, நேற்று முன்தினம்(22ம் தேதி) வரை  7030 இயந்திரங்கள் சரிபார்க்கப்பட்டது. இதில், 19 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 207 கண்ட்ரோல் யூனிட்கள், 67 விவி பேட் இயந்திரங்களில் குறைபாடு உள்ளதை முதல்நிலை சரிபார்க்கும் பணியின்போது தொழில்நுட்ப பொறியாளர்கள் கண்டறிந்தனர். மீதமுள்ள இயந்திரங்கள் சரிபார்க்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நேற்று கிருஷ்ணகிரி வேளாண் விற்பனை மற்றும் வணிக வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு, விவி பேட் இயந்திரங்களின் முதல்நிலை சரிபார்க்கும் பணிகளை, கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி நேரில் ஆய்வு செய்

Tags : Launch ,
× RELATED தனியார் நிறுவன ராக்கெட் ஏவுவதற்கு இஸ்ரோ அனுமதி!!