தக்கலை, டிச.24: தக்கலை அருகே மதமோதலை தூண்டும் வகையில் பேசியதாக மத போதகர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தக்கலை அடுத்த திருவிதாங்கோடு பள்ளிவாசலில் நடைபெற்ற விழாவில் நாகர்கோவில் கலாச்சார பள்ளியின் தலைமை இமாம் சவுக்கத் அலி உஸ்மானி சொற்பொழிவு நிகழ்த்தினார். இந்த சொற்பொழிவின் போது மத மோதலை தூண்டும் வகையில் பேசியதாக தக்கலை காவல் நிலைய உதவி ஆய்வாளர் ரசல்ராஜ் தக்கலை போலீசில் புகார் அளித்தார். இதன்பேரில் மதபோதகர் மீது தக்கலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.