×

குளச்சல் காவல் நிலையத்தில் கல்லூரி மாணவி காதலனுடன் தஞ்சம்

குளச்சல்,டிச.24: குளச்சல் அருகே பத்தறைகாலனியை சேர்ந்தவர் சிங்கராயன் (52). இவரது மகள் ரம்யா (19). கல்லூரி மாணவி. கடந்த 16ம் தேதி வீட்டில் இருந்தவர் திடீரென மாயமானார். இது குறித்து  சிங்கராயன் குளச்சல் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.  போலீசார் மாயமான மாணவியை தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்றுமுன்தினம்  மாலை கருங்கலை சேர்ந்த காதலன் சுபினுடன் (24) மாணவி குளச்சல் காவல்  நிலையத்தில் தஞ்சமடைந்தார். 2 பேரும்  காதலித்து  வருவதாகவும், மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு வழிப்பாட்டு தலத்தில் வைத்து  திருமணம் செய்து கொண்டதாகவும் கூறினர்.  இது குறித்து காதலர்களின்  பெற்றோருக்கு போலீசார் தகவல் கொடுத்தனர். மாணவியின் உறவினர்கள் காவல்  நிலையத்துக்கு வந்தனர். அப்போது மாணவி ரம்யா காதல் கணவர்  சுபினுடன் செல்வதில் உறுதியாக இருந்தார். இதையடுத்து போலீசார் அறிவுரை கூறி  சுபினுடன் அனுப்பி வைத்தனர். சுபின் மார்த்தாண்டத்தில் ஒரு செல்போன்  கடையில் வேலை பார்த்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : college student boyfriend ,police station ,Kulachal ,
× RELATED வெறுப்பு பேச்சு: பிரதமர் மோடி மீது...