×

நாகர்கோவிலில் மனைவி பிரிந்த ஏக்கத்தில் தொழிலாளி தற்கொலை

நாகர்கோவில், டிச. 24:   தூத்துக்குடி மாவட்டம் உடையார்குளம் குருசடி தெருவை சேர்ந்தவர் அருள்ராஜ்(36). இவர் நாகர்கோவிலில் உள்ள ஒரு சலூன் கடையில் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி கடந்த 3 வருடத்திற்கு முன்பு அருள்ராஜை பிரிந்து சென்று விட்டார். இதனால் அருள்ராஜ் மன வருத்தத்தில் இருந்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று நாகர்கோவில் பால்பண்ணை அருகே விஷம் குடித்த நிலையில் அருள்ராஜ் மயங்கி கிடந்தார். அவரை மீட்டு ஆசாரிபள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதனை செய்த போது அருள்ராஜ் இறந்து போனது தெரியவந்தது. இது குறித்து அருள்ராஜின் சகோதரி சசிகலா கொடுத்த புகாரின் பேரில் நேசமணிநகர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags : suicide ,Nagercoil ,
× RELATED தெலங்கானாவில் மேலும் 2 விவசாயிகள் தற்கொலை