×

ஆரல்வாய்மொழி அருகே ஆட்டோ மோதி 2 துண்டான மின்கம்பம் தரமற்றமுறையில் தயாரிப்பு

ஆரல்வாய்மொழி, டிச.24: ஆரல்வாய்மொழி  அருகே செண்பகராமன்புதூரை சேர்ந்தவர் முருகன். ஆட்டோ ஓட்டுனர். இவர் நேற்று  காலை செண்பகராமன்புதூரில்- பூதப்பாண்டி நெடுஞ்சாலையில் ஆட்டோவை ஓட்டி  சென்றார். முத்துநகர் அருகே வரும்போது திடீரென ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்து  சாலையோர மின்கம்பத்தில் மோதியது. இதில் மின்கம்பம் 2 துண்டாக உடைந்தது.  இதனால் அந்த பகுதியில் மின்தடை ஏற்பட்டது. சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர்  ஓடி வந்தனர்.  விபத்தில் ஆட்டோ முன்பகுதி சேதமடைந்தது. டிரைவர்  அதிர்ஷ்டவமாக காயமின்றி உயிர்தப்பினார். இதுகுறித்து அப்பகுதி  பொதுமக்கள் கூறியதாவது: ஆரல்வாய்மொழி பகுதியில் சாலையோரம் நிறுவப்பட்டுள்ள  மின்கம்பங்கள் தரமற்ற முறையில் உள்ளன. இதனால் லேசாக தட்டுப்பட்டாலே  முறிந்து விழும் நிலை உள்ளது.  ஆட்டோ முன்பகுதி இடித்ததில் மின்கம்பம்  இரண்டு துண்டாகியுள்ளது. விபத்து ஏற்பட்டால் சம்பந்தபட்ட நபர்களுக்கு  மின்வாரியம் சார்பில் அதிகபடியான அபராதம் விதிக்கின்றனர். ஆனால் அதற்கு ஏற்ப  மின்கம்பம் தரமானதாக இல்லை. எனவே சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள்  மின்கம்பங்கள் தயாரிப்பு பணிகள் தரமானதாக உள்ளதா? என ஆய்வு ெசய்ய வேண்டும் என்று  கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Aralvaymozhi ,
× RELATED ஆரல்வாய்மொழியில் தேவசகாயம் புனிதர்...