×

அரசு அலுவலகங்களில் தேவர் படம் வைக்க கோரி மனு

திருப்பூர், டிச.24: அரசு அலுவலகங்களில் முத்துராமலிங்க தேவரின் உருவப்படம் வைக்கக் கோரி முக்குலத்துபுலிகள் கட்சியினர் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
சுதந்திர போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் திருவுருவ படத்தை அரசு அலுவலகங்கள், மற்றும் அரசு சார்ந்த கட்டிடங்களில் வைக்க வேண்டும் என அரசாணை உள்ளது. ஆனால், இதுவரை எந்த அரசு அலுவலகங்களிலும் தேவரின் படம் வைக்கவில்லை. அனைத்து அரசு அலுவலகங்களிலும் உடனடியாக முத்துராமலிங்க தேவரின் படம் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறி உள்ளனர். இதில், கொங்கு மண்டல செயலாளர் ரமேஷ், மாவட்ட செயலாளர் குணாநிதி, துணை செயலாளர் குமரன், மாவட்ட இளைஞரணி செயலாளர் சுந்தர், துணை செயலாளர் வினோத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : government offices ,God ,
× RELATED எதற்காக இறைத்தூதர்கள்?