×

ஊட்டி, பந்தலூரில் தி.மு.க. சார்பில் கிராம சபை கூட்டம்

ஊட்டி, டிச. 24:  ஊட்டி நகர தி.மு.க. சார்பில்  கஸ்தூரிபாய் காலனி பகுதியில் கிராம சபை கூட்டம் நடந்தது. நகர  செயலாளர் ஜார்ஜ் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் நாசர் அலி, தலைமை  செயற்குழு உறுப்பினர்கள் இளங்கோவன், முஸ்தபா, நகர துணை செயலாளர்கள்  இச்சுபாய், அணில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில்,  தற்போது தமிழகத்தை ஆட்சி செய்து வரும் அ.தி.மு.க.வினர் மக்களுக்கு இழைத்து  வரும் துரோகங்கள் குறித்தும், அதில் இருந்து தமிழகத்தை மீட்பது குறித்து  பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். கிளை நிர்வாகிகள்  மோகன், பிரியா, கண்ணகி, செல்வி, வாசுகி, ஜெகோபி, கார்டன் கிருஷ்ணன்,  புஷ்பராஜ், மஞ்சுகுமார், ஸ்டேன்லி, வில்லியம், சம்பத், தியாகு, கமலகண்ணன்,  காந்தல்ரவி, பாலமுருகன், டெஸ்சி லூயிசா, மகாலட்சுமி உட்பட பலர் கலந்துக்  கொண்டனர். பந்தலூர்: பந்தலூர் அருகே தேவாலா வாளவயல் பகுதியில் அ.தி.மு.க.வை நிராகரிக்கிறோம்  என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் கிராம சபை கூட்டம் நேற்று நடந்தது. கூடலூர் எம்.எல்.ஏ. திராவிடமணி தலைமை வகித்தார்.

நெல்லியாளம் நகர செயலாளர் காசிலிங்கம் முன்னிலை வகித்தார். நகர நிர்வாகிகள் தென்னரசு, ஷீலா, நாகராஜ், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் ஆலன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சேகர், முன்னாள் நகராட்சி தலைவர் அமிர்தலிங்கம், ஆதிதிராவிடர் நல துணை அமைப்பாளர், ஜெயசீலன், அணிகளின் துணை அமைப்பாளர்கள் ஞானசேகர், சேகர், நகர இளைஞரணி அமைப்பாளர் முரளிதரன், வார்டு செயலாளர்கள் பெருமாள், செல்வராஜ், பாலா, ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Tags : DMK ,council ,meeting ,Ooty ,Pandharpur Village ,
× RELATED மோடி ஆட்சியை பார்த்து ஐநா சபையே சிரிக்கிறது