×

ஓட்டல், ரெசார்ட்டுக்களில் புத்தாண்டு கொண்டாட தடை

ஊட்டி, டிச. 24:தமிழக அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஓட்டல் மற்றும் கிளப்புகளில் புத்தாண்டு கொண்டாடங்களுக்கு தடை விதித்துள்ளது. இதனால், புத்தாண்டை கொண்டாட ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் வர வாய்ப்பில்லை. இருப்பினும் மாவட்ட நிர்வாகம் அனைத்து ஓட்டல்கள் மற்றும் ரெசார்ட்டுக்களுக்கு நோட்டீஸ் வழங்கியுள்ளது. அதில், புத்தாண்டு தினம் மற்றும் அதற்கு முந்தைய தினம் இரவு எந்த ஒரு நிகழ்ச்சிகளையும் நடத்தக்கூடாது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறுகையில், மாவட்டத்தில் உள்ள அனைத்து ஓட்டல்கள் மற்றும் ரெசார்ட்டுக்களுக்கு எவ்வித நிகழ்ச்சிகளும் புத்தாண்டு தினத்தன்று நடத்தக்கூடாது என நோட்டீஸ் வழங்கியுள்ளோம். இதனை மீறி யாரேனும் நிகழ்ச்சிகளை நடத்தினால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.


Tags : hotels ,resorts ,New Year's Eve ,
× RELATED மராட்டியம்: மராத்தியர்களின் புத்தாண்டான குடி பத்வா கோலாகல கொண்டாட்டம்