×

மேட்டுப்பாளையத்தில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை விரைந்து முடிக்க கலெக்டர் உத்தரவு

கோவை, டிச. 24: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சி பகுதியில் நடந்து வரும் பாதாள சாக்கடை திட்டப்பணிகளை மாவட்ட கலெக்டர் ராஜாமணி நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார். பின்னர், நிருபர்களிடம் கூறியதாவது:
மேட்டுப்பாளையம் நகராட்சியில் சுகாதார வசதிகளை மேம்படுத்த, சுத்திகரிப்பு நிலையத்துடன்கூடிய பாதாள சாக்கடை திட்டப்பணிகள் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திட்ட மதிப்பீடு ரூ.91.70 கோடி ஆகும். நகரில், 14 இடங்களில் கழிவுநீர் சேகரிக்கப்பட்டு, சிக்கதாசம்பாளையத்தில் அமைக்கப்பட்டுள்ள  கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டுசெல்லப்பட்டு சுத்திகரிப்பு செய்யப்படும். இத்திட்டத்தின் மூலம், 17 ஆயிரம் வீட்டு இணைப்பு வழங்கப்படும். தற்போது, 83 சதவீத பணிகள்  முடிவடைந்துள்ளன. மீதமுள்ள பணிகளை 2021ம் ஆண்டு மார்ச்  மாத இறுதிக்குள் முடித்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு கலெக்டர் ராஜாமணி கூறினார்.

Tags : completion ,Mettupalayam ,
× RELATED ஊர்க்காவல் படை பயிற்சி நிறைவு விழா