×

அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

 

புதுக்கோட்டை, செப். 24: புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தையே அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 11 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டையில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஜபருல்லா தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் ரெங்கசாமி உள்ளிட்டோரும் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.

Tags : Government ,Employees Union ,Pudukkottai ,Tamil Nadu Government Employees Union ,
× RELATED கணக்கீட்டு படிவம் வீடு வீடாக சென்று...