×

சமையலர், துப்புரவாளர் காலிப்பணியிடம்: நேர்முகத்தேர்வு கடிதம் கிடைக்காத நபர்கள் 28ம்தேதி நேரில் பெறலாம்

திருவாரூர், டிச.23: திருவாரூர் மாவட்ட ஆதிதிராவிடர் நலத் துறையில் காலியாக இருந்துவரும் சமையலர் மற்றும் துப்புரவாளர் பணியிடங்களுக்கு அழைப்பானை கடிதம் கிடைக்க பெறாதவர்கள் வரும் 28ம் தேதி நேரில் பெற்றுக் கொள்ளுமாறு கலெக்டர் சாந்தா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
திருவாரூர் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் விடுதிகளில் காலியாக இருந்த வரும் 22 சமையலர் பணியிடங்கள் மற்றும் 6 தொகுப்பூதிய துப்புரவாளர் பணியிடங்களை பூர்த்தி செய்வதற்கு ஏற்கனவே விண்ணப்பங்கள் பெறப்பட்டு அதற்கான நேர்முக தேர்வுக்கு அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

இந்நிலையில் விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வுக்கான அழைப்புக் கடிதம் வரும் 26ம் தேதிக்குள் கிடைக்கப் பெறாதவர்கள் 28ம் தேதி கலெக்டர் அலுவலகத்தில் இயங்கி வரும் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் நேரில் பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு கலெக்டர் சாந்தா தெரிவித்துள்ளார்.

Tags : Individuals ,Chef ,
× RELATED அரசு புறம்போக்கு நிலத்தை...