×

புதிய தார்சாலை போடப்பட்ட 4 மாதத்தில் சேதமானதால் கிராமமக்கள் மறியல்

பொன்னமராவதி,டிச.23: பொன்னமராவதி அருகே புதிதாக அமைக்கப்பட்ட தார் சாலை 4 மாதத்தில் முழுமையாக சேதமடைந்ததாக கூறி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள சீகம்பட்டி கிராமத்திற்க்கு செல்லும் சாலை முழுமையாக சேதம் அடைந்து புதிதாக போடப்படாமல் இருந்தது. பொதுமக்களின் பல்வேறு போராட்டத்தின் எதிரொலியாக பதினைந்து ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஆகஸ்ட் மாதம் புதிய தார்சாலை அமைக்கப்பட்டது. புதிய தார்சாலை அமைத்து 4 மாத்திலேயே சாலை முற்றிலுமாக கற்கள், மணல் தெரியும் நிலையில் பழுதடைந்துள்ளது. 15 ஆண்டுகளுக்கு பிறகு போடப்பட்ட தார் சாலையை நான்கு மாதங்களிலேயே இவ்வாறு தரமற்ற முறையில் சாலை இருப்பதை கண்டு ஆத்திரமடைந்த அடைந்த சீகம்பட்டி பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை கூறியும் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லாததால் ஊர்மக்கள் ஒன்று கூடி திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் அவ்வழியாக வந்த அரசு பேருந்தினை சிறைபிடித்தனர் . இதனால் போக்குவரத்து பாதிப்படைந்தது காவல் துறை, மற்றும் ஒன்றிய அதிகாரிகள்  ஊர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதில் உடன்பாடு ஏற்பட்டது இதையடுத்து மக்கள் கலைந்து சென்றனர்.

Tags :
× RELATED திருச்சி விவசாயியுடன் வேளாண். கல்லூரி மாணவிகள் சந்திப்பு