×

ஆவுடையார்கோவில் அருகே விவசாயிக்கு அரிவாள் வெட்டு

அறந்தாங்கி, டிச.23: ஆவுடையார்கோவில் அருகே விவசாயியை அரிவாளால் வெட்டியவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆவுடையார் கோவிலை அடுத்த கருங்காடு பகுதியை சேர்ந்தவர் பிலியன் மகன் அய்யனார்.(20). விவசாயி. இவர் நேற்று இரவு கருங்காடு சாய்பாபா கோவில் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு ஒரு காரில் வந்த மர்ம நபர்கள் அய்யனாரை அரிவாளால் வெட்டியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த அய்யனாரை சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து நாகுடி எஸ்.ஐ ராஜேந்திரன் வழக்கு பதிவு செய்து அய்யனாரை வெட்டியவர்களை தேடி வருகின்றார்.

Tags : Audyarko ,
× RELATED ஆவுடையார்கோவில் அருகே விவசாயிக்கு அரிவாள் வெட்டு உறவினர்கள் மறியல்