புதுக்கோட்டை, டிச. 23: புதுக்கோட்டை அருகே தனியார் செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. புதுக்கோட்டை மேட்டுப்பட்டி பகுதியில் தனியார் செல்போன் டவர் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனை எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால் தொடர்ந்து பணிகள் நடந்ததால் நேற்று அந்த பகுதியை சேர்ந்த மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற கணேஷ்நகர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.