×

டெல்லி போராட்டத்துக்கு ஆதரவாக விவசாயிகள் மனித சங்கிலி

ஒரத்தநாடு, டிச. 23: டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக ஒரத்தநாடு அருகே விவசாயிகள், கம்யூனிஸ்ட் கட்சியினர் 200க்கும் மேற்பட்டோர் மனித சங்கிலி போராட்டம் நடத்தினர். மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் தினம்தோறும் போராட்டம் நடந்து வருகிறது. இந்நிலையில் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே புலவன்காட்டில் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் விவசாயிகள் சங்கம் சார்பில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. உண்ணாவிரத போராட்டத்துக்கு போலீசார் தடை விதித்ததால் அங்கு திரண்ட 200க்கும் மேற்பட்ட விவசாயிகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஊராட்சி மன்ற தலைவர் மெய்யப்பன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் சாலையோரம் மனிதசங்கிலி போராட்டம் நடத்தினர். இதில் இந்திய கம்யூனிஸ்ட் ஒன்றிய செயலாளர் சீனிமுருகையன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : Farmers human chain ,Delhi ,
× RELATED அமலாக்கத்துறை கைது செய்ததற்கு எதிரான...