×

திருவையாறு ஆண்டவர்் அல்வா கடை உரிமையாளர் ஆசி

திருவையாறு, டிச. 24: திருவையாறில் தருமபுர ஆதீனத்துக்கு சொந்தமான அறம்வளர்த்தநாயகி உடனாகிய ஐயாறப்பர் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு தருமபுர ஆதீன ல மாசிலாமணி ஞானசம்பந்த பராமாச்சாரிய சுவாமிகள் மார்கழி மாத சிறப்பு தரிசனத்துக்காக வந்தார். அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் கும்ப மரியாதை கொடுத்து வரவேற்றனர். பிறகு குருமகாசன்னிதானம், ஐயாறப்பர் கோயில் சென்று ஐயாறப்பரையும், அறம்வளர்த்த நாயகியையும் தரிசனம் செய்தார். அப்போது சிறப்பு அபிஷேகம், சிறப்பு ஆராதனை நடந்தத. சிவாச்சாரியார்கள் குருமகா சன்னிதானத்துக்கு பிரதாசம் வழங்கினர். இதைதொடர்ந்து கோயில் நான்கு பிரகாரங்களையும் சுற்றி வந்து மடத்தில் அமர்ந்து பக்தர்களுக்கு குருமகா சன்னிதானம் அருளாசி வழங்கினார். இதில் முன்னாள் எம்எல்ஏ ரத்தினசாமி, ஆண்டவர் அல்வா கடை உரிமையாளர் கோவி.கணேசமூர்த்தி, ஐயாறப்பர் இறைப்பணி மன்ற நிர்வாகிகள் செந்தில், குமரன், பொதுமக்கள், பக்தர்கள் பங்கேற்று குருமகா சன்னிதானத்திடம் அருளாசி பெற்றனர். ஏற்பாடுகளை தருமபுர ஆதீன கோவில் கேசியர் அகோரம், எழுத்தர் ஆனந்தன் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்

Tags : Alva ,Thiruvaiyaru ,shop owner ,Asi ,
× RELATED வேட்பாளர்களுக்கான 3ம் கட்ட ஒத்திசைவு கூட்டம்