×

14வது ஊதிய ஒப்பந்தத்தை துவக்கிட வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் தொடர் முழக்க போராட்டம்

திருச்சி, டிச.23: திருச்சியில் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் சார்பில் தொடர் முழக்க போராட்டம் நடந்தது. தொமுச சங்க பொதுச்செயலாளர் குணசேகரன் தலைமை வகித்தார். தொமுச கிளைச்செயலாளர்கள் சந்திரசேகரன், கல்யாணகுமார், சிஐடியூ பொதுச்செயலாளர் கருணாநிதி, ஏஐடியூசி பொதுச்செயலாளர் நேருதுரை, ஐஎன்டியூசி பொதுச்செயலாளர் துரைராஜ், டிடிஎஸ்எப் பணியாளர் சங்க செயலாளர் பெருமாள், ஏஏஎல்எல்எப் தலைவர் வையாபுரி, ஹெச்எம்எஸ் சங்க பொதுச்செயலாளர் செல்வம், எம்எல்எப் பொதுச்செயலாளர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் 14வது ஊதிய ஒப்பந்தத்தை துவக்கிட வேண்டும். போக்குவரத்து கழகங்களை பாதுகாத்திட வரவுக்கும் செலவுக்குமான இடைப்பட்ட நிதியை வழங்கிட வேண்டும். 100 சதவீத பஸ்களை இயக்கிட வேண்டும். ஓய்வு பெற்றவர்களின் பணப்பலன்கள், அகவிலைப்படியை உயர்த்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. இதில் அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Tags : transport workers ,launch ,
× RELATED வெயிலில் இருந்து போக்குவரத்து...