×

பெரம்பலூர் எஸ்பி தகவல் பெரம்பலூரில் சட்டமன்ற தேர்தல் குறித்து பாஜ நிர்வாகிகள் ஆலோசனை

பெரம்பலூர், டிச.23: தமிழக அளவிலான பாஜக கட்சியின் மாவட்டபொருளாளர் களுக்கான பயிற்சி கூட்டம் பெரம்பலூரில் நேற்று நடந்தது. பாஜக கட்சியின் தமிழக அளவிலான அனைத்து மாவட்டப் பொருளாளர் களுக்கான பயிற்சிக் கூட்டம் பெரம்பலூர் அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் கல்வி நிறுவன வளாகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு பாஜக மாநில பொருளாளர் சேகர் தலைமை வகித்தார். மாநில இணைப் பொருளாளர் சிவசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மாநில தலைவர் முருகன் கலந்து கொண்டு சிற ப்புரையாற்றினார். இதில் பாஜக கட்சியின் மாநில துணைத் தலைவர்கள் ராஜா, சக்கரவர்த்தி, மாநிலச் செயலாளர் வரதராஜன், பெரம்பலூர் மாவட்டத் தலைவர் சந்திரசேகர், மாவட்ட பொருளாளர் அரும்பாவூர் ராஜேந்திரன் மற்றும் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களை சேர்ந்த பொருளாளர்கள் கலந்து கொண்டனர். இதில் நடைபெறவுள்ள சட்ட மன்ற தேர்தல் குறித்தும் பூத் கமிட்டி செயல்பாடுகள் குறித்தும் பேசப்பட்டது.


பின்னர் பாஜ மாநில தலைவர் எல்.முருகன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: வரும் 25ம்தேதி முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்த தினத்தை பாஜக சார்பில் நல்லாட்சி நாளாக கொண்டாட உள்ளோம். பிரதமர் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 41 லட்சம் விவசாயிகள் பயன்பெற்று வருகின்றனர். இதனால் விவசாயிகளின் தற்கொலை தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. எனவேதான் இந்த வேளாண் திருத்த சட்டத்தை தமிழக விவசாயிகள் ஆதரித்து வருகின்றனர். வரும் சட்டமன்ற தேர்தலில் எங்களது கூட்டணி ஆட்சியை பிடிக்கும் என்றார்.

Tags : executives ,BJP ,Assembly ,Perambalur ,elections ,
× RELATED சிக்கிம் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி...