×

துவரங்குறிச்சி கடையில் ரூ.2.50 லட்சம் டயர்கள் திருட்டு

மணப்பாறை, டிச.23: துவரங்குறிச்சியில் ரூபாய் இரண்டரை லட்சம் மதிப்பிலான டயர்கள் திருட்டு போன சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். மணப்பாறையை அடுத்த மருங்காபுரி ஒன்றியம் துவரங்குறிச்சி முஸ்லிம் நடுத்தெருவில் வசித்து வருபவர் முகமதுசெரீப் மகன் பஷீர்அகமது(54). இவர் பஸ் நிலையம் அருகே டயர் விற்பனை கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கடையை மூடிவிட்டு சென்ற பஷீர்அகமது நேற்று காலை கடையை திறந்து பார்த்தபோது ரூபாய் இரண்டரை லட்சம் மதிப்பிலான டயர்கள் காணாமல் போயிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து துவரங்குறிச்சி போலீசில் பஷீர்அகமது அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் அருகேயுள்ள சிசிடிவி காட்சிகளை சேகரித்து டயர்களை திருடி சென்ற மர்ம நபர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags : shop ,Tuvarankurichi ,
× RELATED ஒரத்தநாடு கடை தெருவில் 5 கடைகளில் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி