×

அஞ்சுகிராமம் அருகே மளிகைகடை உட்பட 3 இடங்களில் திருட்டு

அஞ்சுகிராமம், டிச.23: அஞ்சுகிராமம்  அருகே மளிகை கடை உட்பட 3 இடங்களில் கொள்ளையடித்த மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். குமரி மாவட்டம் அஞ்சுகிராமம்  அருகே செண்பகராமபுரத்தை சேர்ந்தவர் மகேஷ் (36). கடந்த 3 வருடமாக  வழுக்கம்பாறை மெயின் ரோட்டில் சங்கரலிங்கபுரம் சந்திப்பில் மளிகை கடை  நடத்தி வருகிறார்.  நேற்று முன்தினம் இரவு  வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். நேற்று காலை கடையை திறக்க வந்தபோது  பூட்டுகள் உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.  உள்ளே  சென்று பார்த்தார்.  பொருட்கள் ஆங்காங்கே சிதறிக் கிடந்தன. கடையில்  இருந்து சுமார் ரூ. 5 ஆயிரம் மதிப்புள்ள சிகரெட் பாக்கெட்டுகள்  திருடப்பட்டிருந்தது . கல்லாப்  பெட்டியில் இருந்த ₹3 ஆயிரமம் பணமும் திருடப்பட்டு இருந்தது. இதுகுறித்து  மகேஷ் அஞ்சுகிராமம் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.   போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.   கடையின் பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான  காட்சிகளையும் ஆய்வு செய்தனர்.

இதேபோல் கன்னியாகுமரி  மெயின்ரோட்டில் வாரியூர் சந்திப்பில் உள்ள முட்டை குடோன் மற்றும் ஆக்கர்  கடையிலும்  பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கைவரிசை காட்டி சென்றுள்ளனர்.  முட்டை கடையில் சுமார் 25க்கும் மேற்பட்ட முட்டை தட்டுகள் கொள்ளை போய்  உள்ளது. ஆக்கர் கடையில் கல்லாப்பெட்டியை இரும்புக் கம்பி கொண்டு உடைத்து ₹5 ஆயிரம்  திருடியுள்ளனர். மேலும் சில ஆக்கர் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளன.  அஞ்சுகிராமம் போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.அஞ்சுகிராமம்  பகுதியில் சமீப காலமாக கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த சில  மாதங்களுக்கு முன்பு ஜேம்ஸ்டவுண் சந்திப்பில் அமைந்துள்ள திமுக பிரமுகரின்  கடையில் கொள்ளையர்கள் கைவரிசை காட்டினர். இதேபோல் வாரியூர் பகுதியில் உள்ள  கடைகளிலும் பூட்டுகள் உடைக்கப்பட்டு திருடு போயிருந்தது.  தொடர்ந்துநடக்கும்  கொள்ளை சம்பவங்களால் மக்கள் பீதியில் உள்ளனர்.

Tags : Theft ,locations ,grocery store ,Ansugram ,
× RELATED தமிழ்நாடு முழுவதும் 1,000 இடங்களில் ORS...