×

புளியங்குடி அருகே நெற்கட்டும்செவலில் புதிய நூலக கட்டிடம் மனோகரன் எம்எல்ஏ திறந்துவைத்தார்

புளியங்குடி, டிச. 23: புளியங்குடி அருகே நெற்கட்டும்செவலில் தொகுதி வளர்ச்சி நிதியில் ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய நூலகக் கட்டிடத்தை மனோகரன் எம்எல்ஏ திறந்துவைத்தார்.  வாசுதேவநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட புளியங்குடி அருகே நெற்கட்டும் செவல் கிராமத்தில் வாடகை கட்டிடத்தில் இயங்கிவந்த அரசு நூலகத்திற்கு சொந்த கட்டிடம் கட்டுமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதை ஏற்றுக்கொண்ட மனோகரன் எம்எல்ஏ, உள்ளூர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.8 லட்சம் ஒதுக்கீடு செய்தார். இதையடுத்து துவங்கப்பட்ட கட்டிட கட்டுமானப் பணி நிறைவடைந்தது. இதையடுத்து புதிய நூலக கட்டிடத் திறப்பு விழா நேற்று நடந்தது. நெற்கட்டும்செவல் கிளை நூலகர் அமுதா வரவேற்றார்.

 விழாவில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற மனோகரன் எம்எல்ஏ, தலைமை தாங்கி புதிய நூலகக் கட்டிடத்தைத் திறந்துவைத்தார். இதில் மாவட்ட நூலக அலுவலர் வயலட், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவர் யுஎஸ்எ வெங்கடேசன், அதிமுக வாசுதேவநல்லூர் தெற்கு ஒன்றியச் செயலாளர் துரை பாண்டியன், வடக்கு ஒன்றியச்  செயலாளர் மூர்த்தி பாண்டியன், வாசுதேவநல்லூர் பேரூர்  செயலாளர் சீமான் மணிகண்டன், மாவட்ட நூலக கண்காணிப்பாளர் சங்கரன், நூலக ஆய்வாளர் கணேசன், வட்டார நூலகர் முருகன், முத்து மாணிக்கம், உள்ளார் மூர்த்தி, மாணவர் அணி மாவட்ட துணைச் செயலாளர் சசிகுமார், பெற்றோர்- ஆசிரியர் கழகத்தலைவர் சந்திரசேகர் பாண்டியன், கிளைச் செயலாளர் உள்ளமுடையார், பட்டக்குறிச்சி மணிகண்டன், விசாலாட்சி முருகன், ராமகளஞ்சியம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags : Manokaran MLA ,library building ,Puliyangudi ,Nerkattumseval ,
× RELATED தென்காசியில் காரும் லாரியும் மோதிக் கொண்ட விபத்து: 6 பேர் பலி