திருப்பூர், டிச.23: திருப்பூர், திருமுருகன்பூண்டியை அடுத்த அணைப்புதூர் சந்திப்பில் கடந்த 20ம் தேதி அதிகாலை அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஒருவர் இறந்து கிடந்தார். திருமுருகன்பூண்டி போலீசார் இறந்து கிடந்தவரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அவிநாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் அவினாசியை அடுத்த பெரிய கருணைபாளையம் பகுதியை சேர்ந்த உதயகுமார் (45) என்பதும், அவிநாசியில் உள்ள ஓட்டலில் ஊழியராக வேலை பார்த்து வந்ததும் தெரிய வந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் வீட்டில் யாரிடமும் சொல்லாமல் வெளியூர் சென்று விட்டதாக தெரிகிறது. இந்நிலையில், அணைப்புதூர் வந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதி இறந்தது தெரிய வந்தது.