×

டாஸ்மாக் கடை மூட உறுதி அளித்தும் நடவடிக்கை இல்லை

திருப்பூர், டிச.23: திருப்பூரில் டாஸ்மாக் கடை மூடுவதற்கு எழுத்து பூர்வமாக உறுதி அளித்த பின்னரும் இன்னும் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதை கண்டித்து நேற்று சுப்பராயன் எம்.பி. கலெக்டர் விஜய கார்த்திகேயனிடம் நேற்று மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது: திருப்பூர் வடக்கு வட்டம் நெருப்பெரிச்சல் கிராமம், வாவிபாளையம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை (எண்:3942) நிரந்தரமாக மூடக்கோரி அப்பகுதியை சேர்ந்த அனைத்துப்பகுதி மக்கள் கடந்த ஆகஸ்ட் மாதம்  போராட்டம் நடத்தினர்.

அதன்பின், திருப்பூர் வடக்கு வாட்டாட்சியர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடந்தது. இதில், 3 மாதத்தில் வேறு இடத்திற்கு டாஸ்மாக் கடையை மாற்றுவது, வேறு இடம் கிடைக்கவில்லை என்றால் நிரந்தராமக மூடுவது என அதிகாரிகள் ஒப்புக்கொண்டு எழுத்துபூர்வமாக உறுதியளித்தனர்.
ஆனால், இதுவரை கடையை மாற்றவோ, மூடவோ இல்லை. எழுத்துப்பூர்வமாக உறுதியளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்காமல் இருப்பது முறையற்ற செயல். எனவே, கடையை உடனடியாக மூட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறி உள்ளார்.

Tags : closure ,store ,Tasmac ,
× RELATED தாம்பரம் அருகே உணவகத்தில் தீ விபத்து..!!